Saturday, October 27, 2007

கேவல அரசியல்



முன்னாள் முதல்வர் வீட்டிலேயே அத்து மீறி ஆள் நுழைந்திருக்கிறான். ஆளைப் பிடித்து விசாரணையும் நடக்குது. பாதுகாப்பு விசயத்தில் இருக்கும் இந்த குறை வருத்தப்பட வேண்டிய விசயமே. ஆனாப் பாருங்க, கரும்பு தின்ன கூலியாங்கற கதையா இந்த அரசியல்வாதிங்க இத வச்சி எவ்வளவு அட்டகாசம் பண்றாங்க. இந்த கழகம், அந்த கழகம்ன்னு இல்ல எந்த கட்சியா இருந்தாலும் இதயேதான் செய்வாங்க. ஏன்னா, இது நம்ம ஆளுங்களோட தனி அரசியல் ஸ்டைலு.
குளிர்கால சட்டசபை தொடர் தொடங்கியாச்சு, சட்டசபைக்கு போயி எங்க ஊரு எம்.எல்.ஏ ஏதாச்சும் தொகுதிக்கு சாதிப்பாருன்னு எதிர்பார்த்து கிடக்கிற குப்பன் சுப்பனுக்கெல்லாம் வச்சாங்கய்யா ஆப்பு. தொடர் தொடங்கின உடனே பாதுகாப்பு பிரச்சினையை ஆரம்பிச்சாங்க. ஒத்துக்கிறோம், கண்டனத்துக்குறிய விசயம்தான். குரல் குடுக்கிறாங்க. அரசும் ஆளைப் பிடிச்சு விசாரிச்சுக்கிட்டிருக்கு. சரி அடுத்த வேலைய பார்ப்பாங்கன்னு பார்த்தா, சட்டசபைல விளையாடறாங்கய்யா. கடைசில முடிவு வெளிநடப்பு, சஸ்பெண்ட் இதுதான் மிச்சம்.
ஒரு நிமிஷம் இந்த ஆளுங்க எல்லாம் சிந்திக்கணும். ஒவ்வொரு எம்.எல்.ஏவும் அரசாங்க ஊழியன். அரசு சம்பளம், குடியிருப்பு, அப்புறம் சலுகைகள் வேற எக்ஸ்ட்ரா. மக்கள் வரிப் பணத்திலிருந்து கிடைக்கிற வருமானத்திலுருந்து வர பணத்தை சம்பளமா கை நீட்டி வாங்கற ஊழியன் தன் கடைமைய சரி வர செய்யாம, காலத்துக்கும் தலைவன் தலைவி புகழ் பாடி காலம் கழிப்பது சரியல்ல. முதல்வரோ இல்ல மந்திரியோ போகும் போது சாலை ஓரம் போக்குவரத்த தடுத்து நிறுத்தறாங்க. மாணவர்கள், வயதானவங்க, முடியாதவங்க, ஏழை, பணக்காரன்னு பொதுமக்கள் எல்லாரும் வழி விட்டு காத்து கிடக்கிறாங்க. எதுக்குய்யா? நம்மலால தேர்ந்து எடுக்கப்பட்டவர், நமக்காக வேலை செய்ய போயிட்டிருக்கார்ன்னு நாம் குடுக்கற முன்னுரிமைதான் அது. அதை சரியா புரிஞ்சிக்காம பொதுமக்களின் மனங்களை சூறையாடி, சுரண்டி அதில குளிர் காயும் இந்த கேவலமான அரசியல் நிலைமை மாறணும்.
மாறும் என்ற நம்பிக்கையில் ...

1 comment:

Unknown said...

Well said.
Instead of working for the people and the community, these politicians are always worshiping their party leaders as god and wasting their time by doing all the silly things.