Tuesday, January 15, 2008

இந்த பொங்கல் வேளையிலே ...


ழையன கழிந்து
புதியன புகுந்து
போகிக் கொண்டாடுவதும்
இந்த பொங்கல் வேளையிலே ...

திரவனுக்கு கருவுற்று
குந்தி குழந்தையை
ஆற்றினிலே விட்ட கதையும்
இந்த பொங்கல் வேளையிலே ...

யக்காட்டில் வருசம் பூரா
உழுது களைத்த எம்
உழவன் உளமாற பூரித்து போவதும்
இந்த பொங்கல் வேளையிலே ...

ரிழுத்த காளை மாடும்
பால் கொடுத்த பசு மாடும்
கொள்ளை அலங்காரம் கொள்வதும்
இந்த பொங்கல் வேளையிலே ...

புது நெல்லை பொங்க வச்சி
பூசணிக்காய் சாம்பார் வச்சி
பண்ணையாடி பண்ணையாள்
பாரபச்சம் பார்க்காம சரிசமமா
பந்தியிலே சோறுண்ணும் அதிசயமும்
இந்த பொங்கல் வேளையிலே ...