Tuesday, September 11, 2007

தமிழ் மொழியும் அரசியல்வாதியும்


மிழ் மொழி எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமான விசயம் தெரியுங்களா? நம்மாளு மொழி, இனம் அப்படின்னா அப்படியே உணர்ச்சி வசப்பட்டுருவான். அதுக்காக எதையும் தியாகம் பண்ண தயார் ஆயிருவான். இந்த ஒரு விசயத்த நம்மூர் அரசியல்வாதிங்க அவங்க சுயநலனுக்காக உபயோகப்படுத்த எந்த காலகட்டத்திலும் தவறியதே இல்லை. பழுத்த கட்சியிலிருந்து இருந்து இன்னிக்கி புசுசா முளைத்த கட்சிகள் வரை நம்ம பொதுஜனத்த இந்த விசயத்தில எந்த அளவுக்கு சுரண்டியிருக்காங்கன்னு நான் ஒண்ணும் புசுசா சொல்ல தேவையில்லை. ஒரு விசயமும் இல்லன்னா தமிழ் மொழிய கையில எடுத்திருவாங்க. மொழி வளர்க்கிறோம், பிற மொழி இருக்கக் கூடாது அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு போராட்டம். ஒரு வடக்கத்தி லாரி டிரைவர் வழக்கமா இங்கே மதுரைக்கு பக்கத்தில சவாரி வருவார். ஒரு முறை அப்படி வரும் போது கவனிச்சி இருக்காரு, நெடுஞ்சாலைகளில் இருந்த மைல்கல்ல இருந்த இந்தி பேரு தார் பூசி அழிச்சிருங்காங்க. அதப் பார்த்துட்டு கேட்டாரு, வெள்ளக்காரன் கொண்டு வந்த ஆங்கிலத்த வச்சிருக்கீங்க, நம்ம பாரத பொது மொழி இந்திய அழிச்சியிருக்கீங்களேன்னு, இப்படியே போனா ரூபாய் நோட்டுல இருக்கறதயும் அழிப்பீங்களா, இல்ல உபயோகப்படுத்தாம போயிருவீங்களான்னு கேட்டாரு. நம்ம அரசியல்வாதியோட திருவிளையாடல அவருக்கு விளக்கி சொன்னா புரியவா போகுது. அத விடுங்க, சமீபத்தில நம்ம தமிழக அரசு தமிழ் மொழிய பாதுகாக்கணுங்கற ஆர்வத்தில ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதாவது, தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று. இன்னிக்கி வரி ஏய்ப்பு செய்றவன் பட்டியல் போட்டா முக்கால்வசிக்கு மேல திரைப்படத்துறையில் இருக்கறவங்கதான் இருப்பாங்க, அவங்களுக்கு மேலும் ஒரு சலுகை. ஏன்யா? இதுல யாருக்கு நஷ்டம், பொதுஜனத்துக்குத்தானே, இந்த வரி சலுகையினால நம்ம கஜானா மேலும் காலி, அதை சரிகட்ட பொதுஜனத்து மேல வேறவிதமா வரி பாயும். ஒரு நண்பர் சொன்னாரு, தமிழ்-ல பேர் வச்சா பாராட்டுங்க, வரி சலுகை வேண்டாம், தமிழ் மொழி அல்லாத பேர் வச்சா இரட்டை வரி போடுங்க. பேர் வைக்கவும் பயப்படுவாங்க, அரசாங்கத்துக்கு வருமானமும் கிடைக்கும். அதுல தமாசு பார்த்தீங்கனா, பொறுக்கி, கெட்டவன் அப்படீனு எல்லாம் பேர் வச்சி வரி சலுகை வாங்கறாங்க, கேட்டா இதுவெல்லாம் தமிழ் பெயர். இந்த அரசியல்வாதிங்க இத எல்லாம் விட்டுட்டு சிவாஜிங்கற பேர் தமிழா இல்லையா? வரி சலுகை குடுக்கலாமா வேண்டாமான்னு விவாதம் பண்ணிக்கிட்டு நேரத்த வீணாக்கிட்டு இருக்காங்க. பாரத பிரதமர் தொலைகாட்சியில பேசறாரு, எங்க ஊரு பெருசுக்கு ஒண்ணும் புரியல. ஆனா, பிரதமர் பக்கத்தில இருக்கற நம்ம உள்ளூரு அரசியல்வாதியோட புள்ளய பார்த்துட்டு என்னமா சந்தோசப்படறாரு தெரியுமா? வாரிசு, குடும்பம்னு வாழையடி வாழையா இவங்களே குத்தகை எடுத்துகிறாங்க. அவங்க புள்ளங்க எல்லாம் வட மொழியில சர்வ சாதாரணமா பேசுவாங்க, அப்பதான டெல்லியில பொழப்பு நடத்த முடியும். நம்ம பொதுஜனம் ரயில் ஏறி கும்மிடிபூண்டி எல்லைய தாண்டினா, பெப்பே நமக்கு ஊமை பேச்சுதான். அரசியல்வாதிகளுக்கு எங்க எப்படி உணர்ச்சிபூர்வமா தாக்கணும்னு தெரியும், சரியா அடிக்கிறான், சாதிக்கிறான். இந்த நிலைமை மாற வேணும். இந்த விச காய்ச்சல் எல்லாருக்கும் பரவாம நம்மல நாமே தடுத்துக்கணும். சிந்தியுங்க, சரின்னு பட்டா, நமக்கு தெரிஞ்ச நாலு பொதுஜனத்துக்கு சொல்லுங்க ...

1 comment:

Agathiyan John Benedict said...

சுருக்கமாகச் சொல்லியுள்ளீர்கள். சற்றுச் சிக்கலான சப்ஜெக்ட் இது. ஹிந்தியைத் தார் பூசி அழிப்பது சில்லிதான். ஆனாலும், தமிழ் படிப்பதைத் தேவையற்றதாக நினைக்கும் தமிழர்களைத் திசைதிருப்புவதற்கு இதுபோன்ற உத்திகள் தேவைப்படுவதும் உண்மையே.
தொடர்ந்து எழுதுங்கள்...