Monday, June 9, 2025

குஸ்கா ஸ்பெசல்


காலேஜில் படிக்கும்போது வாரத்தில் செவ்வாய்கிழமை அல்லது வியாழக்கிழமை வந்தாலே போதும். நமக்கு ஒருவிதமான குதூகலம் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும். அதுவும் என்னைப்போல் ஊர் பக்கம் இருந்து வந்தவனுக்கு பட்டை கிராம்பு போட்டு தாளிச்சு தம்மு வைத்த தக்காளி சோறே பிரியாணியென இருந்த 90களின் காலத்தில் காலேஜுக்கு வந்தபிறகுதான் இந்த குஸ்கா என்ற பெயரும் அப்படி ஒரு சாப்பிடும் ஐயிட்டம் இருப்பதும் அறிமுகம் ஆனது. இதிலே கரி மட்டும் இருக்காது. மற்றபடி அப்படியே பிரியாணி சோறுதான். அதுவும் அன்லிமிடெடாகக் கிடைக்கும். அந்த குஸ்காவுக்குனே எங்க ஹாஸ்டலில் என்னைப்போல ஒரு வெறித்தனமான ஆர்மியும் இருக்கத்தான் செய்தது.  


மெஸ்ஸில் குஸ்கா போடும்போது கூடவே சைடிஷ் ஆக முட்டை மசாலாவும் உண்டு. அவித்த முட்டையை தக்களித் தொக்கு போன்ற மசாலா கிரேவியில் மூழ்கடித்து தனியாக ஒரு கப்பில் வைத்து கொடுப்பார்கள். பொதுவாக நான்வெஜ் சாப்பிட வேண்டுமெனில்— முட்டையும் அசைவம்தான் அப்போது— அதற்கென தனியாக முன்னமே டோக்கன் வாங்கிவைத்துக் கொள்ளவேண்டும். பின்னாட்களில் ஆம்லெட், ஆஃப்பாயில் போன்றவையும் கொடுத்தார்கள். ஆனால் முட்டை மசாலா கிரேவிதான் பெரும்பாலும் பிரபலமாகக் கிடைக்கும். அத்துடன் சிறப்பான வெங்காயப் பச்சடியும் உண்டு. 


குஸ்கா போடும் நாட்களில் வழக்கத்துக்கு மாறாக மெஸ் திறந்தவுடனே முதல் ஆளாக ஆஜராகி விடுவோம். அப்போதுதான் ஃப்ரெஷாக ஒரு புடி புடிக்கலாம். உள்ளே நுழையும் போதே மசாலா வாசனை ஆளைத் தூக்கும். டேபிள்களில் குஸ்கா நிரப்பிய பேசின்கள் நடுனாயகமாக வீற்றியிருக்கும். ஒரு டேபிளுக்கு இரண்டு பேசின்களும் அதனுடன் சிறிய பக்கெட்டுகளில் வெங்காய பச்சடியும் வைத்திருப்பார்கள். ஒரு டேபிளுக்கு எப்படியும் பனிரெண்டு பேர் வரை சுற்றி அமர்ந்து சாப்பிடலாம். அதற்கேற்ப டேபிளின் ஓரங்களில் சாப்பிடும் தட்டுகள் வைக்கப்பட்டு தட்டின் நடுவில் சுடுநீர் நிரம்பிய டம்பளரை டபரா கப் காஃபி போல கவிழ்த்து வைத்திருப்பார்கள். அதை மெதுவாகத் தொட்டுத் தூக்கினால் அந்த இளஞ்சூட்டு வென்னீர் தட்டில் பரவும். அதை வைத்து நம் திருப்திக்காக தட்டை துடைத்து அலசிய பிறகு அந்த நீரை வடிக்க மெஸ்பாய் ஒரு பக்கெட்டை கொண்டு வருவான். அதிலே அந்த தண்ணீரை வடித்து விடவேண்டும். 


அவன் பின்னாடியே இன்னொருவன்  ஒரு பெரிய தாம்பாளதட்டில் முட்டை மசாலா கிரேவி உள்ள கப்புகளை அடுக்கி எடுத்துக்கொண்டு டேபிள் டேபிளாக போய் நம்மிடமுள்ள டோக்கனை வாங்கிக்கொண்டு வினியோகிப்பான். நாமும் அதை வாங்கி தட்டில் ஒரு ஓரம் வைத்துவிட்டு பேசினிலிருக்கும் குஸ்காவை அள்ளி தட்டில் போடுவோம். தட்டில் குஸ்காவைப் போட்ட பிறகு முட்டை கிரேவியை ஒரு ஓரத்தில் உற்றினால் அது தன்னால் பரவி குஸ்காவை இடித்து உரசி நிற்கும். 

பிறகு வெங்காய பச்சடியை எடுத்து இன்னொரு பக்கம் ஊற்றிய பிறகு நமக்கு நைவேத்தியம்தான். 


குஸ்கா சிறிது வெண்மை கலந்த நிறமாக பொளபொளவென இருக்கும். கரண்டியில் அள்ளும் போது பூக்குவியலை அள்ளுவது போல லேசாக இருககும். பட்டை கிராம்பு ஏலக்காய் என மசாலா வாசனை ஆளையே மயக்கும் அளவுக்கு இருக்கும். அதற்கெல்லாம் ராஜா போல நெய்வாசம் தூக்கலாய் இருக்கும்.  தட்டில் உள்ள வெறும் குஸ்காவை முதலில் சின்னதாக ஒரு ஸ்பூன் அளவுக்கு கையில் எடுத்து ஒரு முதல் வாயாக ஒரு டேஸ்ட் விடவேண்டும். அது நாக்கில் பட்டவுடனே ஒரு புத்துணர்வு வருவது போல இருக்கும். அந்த மயக்கும் மசாலா வாசனை, நெய் பளபளப்பு, பச்சை மிளகாய் கிராம்பு கலந்து ஒரு காரம். அந்த உணர்வை எழுதவெல்லாம் முடியாது. அப்படியொரு சுவை. அதுல கொஞ்சம் இனிப்பும் இருக்கும். அதிலுள்ள தேங்காய் பாலும் வறுபட்டு கரைந்த வெங்காயமும்தான் அதற்கு காரணம். இதுவெல்லாம் கூடி இப்படி ஒரு அமுதக்குவியலாக நம் கண்முன்னே இருக்கும் குஸ்காவை அப்படியே இரண்டாவது வாயாக மசாலா கிரேவியுடன் சாப்பிடும் போது இன்னொரு சுவை கலந்து வந்துசேரும். மூன்றாவது வாயாக அதேபோல ஆனால் இந்த முறை வெங்காயப் பச்சடியோடு ஒரு புடி. இப்ப அவித்த முட்டையையும் ஒரு கடி. 


ஆஹா … சொர்கமே என்றாலும் நம்ம குஸ்காவைப் போல வருமா எனப் பாடத் தோன்றும். அப்படியே மாறிமாறி முதல் ரவுண்டை முடித்து இரண்டாம் ரவுண்டுக்கு போகும்போதுதான் பிரச்சனையே வரும். 


முட்டை கிரேவி தீர்ந்து போயிருக்கும். டோக்கன் இல்லாமல் மீண்டும் கொடுக்க மாட்டான். நம்மிடம் டோக்கனும் தீர்ந்திருக்கும். அப்போதுதான் நம் கண் டேபிளில் கிரேவி பிடிக்காத மாப்பிள்ளைகள் மச்சான்கள் எல்லாம் கண்ணில் படுவார்கள். இல்லையெனில் எக்ஸ்டிரா டோக்கன் வைத்திருப்பவனிடம் கைமாறாக வாங்கி எப்படியாவது கிரேவியை வாங்கி அந்த இரண்டாவது ரவுண்டையும் சாப்பிட்டும்போது ஒரு ஏப்பம் வருமே … ஆஹா அதுவே வரமாகும். 


சாப்பிட்டு கைகழுவிய பிறகும் அந்த நெய் வாசனை ரம்மியமாக நம்மையே ஒட்டியிருக்கும். 


குஸ்கா வாழ்க!!!

Saturday, May 24, 2025

Slate

 


        I spotted it while digging through my old childhood trunk. You never know what kind of treasures you might find—and that’s how I came across it. It was a slate made of hard stone. I’d estimate it to be over 40 years old, at the very least. That’s how old it felt. In this electronic era, even the use of paper and pencil has become nearly obsolete in the name of saving trees. The chances of anyone using stone slates today are absolutely zero. It’s nothing more than an antique now. Those days are truly gone.


         I tried to lift it out of the box—it was that heavy. It could easily substitute for a lightweight dumbbell. I pulled it out carefully. It was still in good shape, with a wooden frame. The corner clips were rusted, and the steel plates had blackened with time.


        I took a closer look. The surface was clean but not entirely black; it had several faded spots. I also noticed a crack, but thankfully, it wasn’t broken. I tried wiping the faded white spots off with my hand—it didn’t help. Instinctively, my fingers moved toward my tongue, as if to moisten them for cleaning. But I stopped and smiled. That’s how we used to clean slates—good old saliva. Instead, I reached for the water bottle beside me, dripped a few drops, and tried wiping it again. Still, it didn’t work.


         Hmm, what could it be? My mind drifted back to those childhood days. Could it be my first drawing of an elephant’s tail, where I pressed hard trying to perfect it? Or maybe the lines from the square games I used to play with my friend during a dull subject class? Perhaps it was from one of those other line games where you had to connect distant dots without the lines touching.


        I found myself lost in nostalgia, curious about what those marks could have been. In a way, slates and the human mind are quite similar—they take in so much. We might erase things as time goes by, but what leaves a deep impression tends to resurface. As my fingers moved across the slate, I noticed the area around the crack was unusually smooth.


        A typical slate shouldn’t be that slippery. Its surface should be slightly rough, making it easier for the pencil to leave marks and for writing to feel natural. Slippery slates don’t offer a good writing experience.


         Back in school, we had a special homemade mix to prepare our blackboards for better writing. We’d grind leftover kitchen coal, amanakku seeds (which produce castor oil), and a special type of plant leaf (oomatham) into a paste. We rubbed it onto the blackboard and let it sit overnight. The next day, we wiped it clean, and it was ready to use. We sometimes used the same mix on our slates to improve writing quality. My hand was still tracing the slate, now gently touching the cracked line.


         Slates were delicate. I always placed mine in the center of my school bag so it wouldn’t crack if it hit the sides of my bicycle or the classroom floor. On days when I did my homework on the slate, I had no choice but to carry it in my hand. If I placed it in the bag, it would erase all my work. I remembered dropping it once while carrying—that’s how the crack happened. But it was still usable, and I managed with it.


        Wow. I thought about how far and closely this slate had traveled with me. If we forgot to bring our slates to class, the teacher would punish us by making us stand outside. But slates had many other uses, too. They could be weapons—either to attack or defend. Sometimes, they even served as umbrellas during a drizzle. They held so many memories.


       You don’t see such slates anymore. The last time I saw one was at a grocery store where it was used to mark daily prices. I’ve also seen them in small village tiffin shops—the owner would use one to calculate bills. I even bought one for my daughter. It had a plastic frame and was made of a lightweight tin. She didn’t use it for even a week before switching to paper and pencil.


          Today, we have countless gadgets, styluses, and digital tablets. We can write and erase instantly. They're easy to maintain—but one thing is missing. They don’t carry the same kind of memories our old stone slates did.


P.S.: One of my college seniors, Parithi, shared a story about how he had found his slate. That inspired me to write a story based on my own experience.

Friday, May 23, 2025

சிலேட்டு


வீட்டில் உள்ள பழைய டிரங்குப் பெட்டியைக் கிளறிக்கொண்டிருந்த போது என் கண்ணில் அது பட்டது. மர ஃப்ரேம் போட்ட சதுரமான ஒரு கருஞ்சிலேட்டு அது. அதை நான் எப்போது வாங்கினேனென்பதே எனக்கு நினைவில்லை. எப்படியும் ஒரு நாற்பது வருசதுக்குக் குறையாமல் இருக்கும். அதன் நான்கு மூலைகளையும் இணைக்கும் இரும்புக் கிளிப்புகளின் ஓரங்கள் துரு ஏறி கருத்திருந்தது. அதைக் கையால் தூக்கிப் பார்த்தேன். அது ஒரு கல்லு சிலேட்டு. நன்கு கனமாகவே இருந்தது. அதன் நடுவில் ஒரு உடைந்த விரிசல் வேறு இருந்தது. ஆனால் உடையவில்லை. 

        பேப்பர் பென்சிலுக்கே இப்போதெல்லாம் நமக்கு வேலையில்லை. ஆனால் ஒரு காலத்தில் சிலேட்டு பென்சில் இல்லையென்றால் நமக்கு ஒரு வேலையும் ஓடாது. சிலேட்டில் எழுதும் பென்சிலை பல்பம் என்றும் அழைப்போம். அதுவும் வகுப்பில் கொடுத்த வீட்டுப்பாட வேலையை செய்துவிட்டு அதைப் பக்குவமாக அழியாமல் எடுத்துப்போய் டீச்சரிடம் காட்டிவிட்டு மார்க்கு வாங்குகிற வரையில் ரொம்பவே கவனமாக இருக்கவேண்டும் அதைப்போல் பள்ளியில் இருந்து திரும்பி வரும்போது அந்த மார்க்கை அழியாமல் பாதுகாத்து வீட்டிலே வந்து காட்ட வேண்டும். 

        அந்த சிலேட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன் பழைய நினைவுகளெல்லாம் என் கண்ணில் மின்னலாய் பட்டு ஓடியது. எப்பொழுதோ எழுதி சரியாக அழிக்கப்படாமல் இருந்தது போல சில இடங்கள் வெளுத்துப் போயிருந்தது. என் உள்ளங்கையை வைத்துத் துடைத்துப் பார்த்தேன். அழியவில்லை. என்னையறியாமல் என் கைவிரல்கள் வாயைத் தேடிப் போனது. ஆனால் சிரித்துக்கொண்டே கையை உடனே எடுத்துவிட்டேன். அப்போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் எச்சிலை கையில் தொட்டு அழித்ததின் பழக்கதோசத்தினால் வந்த வினை. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என சும்மாவா சொல்லிவைத்தார்கள். என்னை சுதாரித்துக்கொண்டு பக்கத்திலுள்ள வாட்டர் பாட்டிலிலிருந்த தண்ணீரை ஒரு துளி தொட்டு துடைத்தேன். இப்போது பளிச்சென அழிந்தது போல இருந்தது. ஆனால் காய்ந்தவுடன் மீண்டும் தன் வெளுப்பை பல்லை போல இளித்துக் காட்டியது. 

        இன்னும் உற்றுப் பார்த்தேன். ஏதோ அந்த எழுத்துகள் என் கண்களுக்கு இன்னும் அழியாமல் இருப்பதாகவே தெரிந்தது. அது என்னவாக இருக்கும். ஒருவேளை நாம் போட்ட முதல் யானை ஓவியமாக இருக்குமோ. வால் பகுதியின் முனையில் அடர்த்தியான முடி இருக்கவேண்டுமென நான் அழுத்திஅழுத்தி தீட்டிய வெண்பட்டைகளாக இருக்குமோ. தமிழாசிரியரின் செய்யுல் பாடம் மனதில் பிடிபடாமால் பக்கத்து மாணவனுடன் கோடிட்டு 'இனிஷியல் ஸ்கொயர்' விளையாடிய கோடுகளா அவை, இல்லை கோடுகள் ஒன்றைஒன்றைத் தொடாமல் தூரத்துப் புள்ளிகளை இணைக்கும் கோடு விளையாட்டாக இருக்குமோ. ஒருவேளை ஆயுதபூஜைக்கு ஒருமுறை சிலேட்டைக் கழுவிவைத்து நடுவில் போட்ட பட்டையின் மிச்சமாக இருக்குமோ. என் மனம் பழைய நினைவுகளில் கோடிட்டு ஊஞ்சலாடியது. மனதுக்கு இதமாக இருந்தது. சிலேட்டும் மனிதனின் மனமும் ஒன்றுதானோ. எவ்வளவோ நினைவுகள் நம் மனதில் பதியும். மறைந்தும் போகும். ஆனால் அதன் அழுத்தம் பொறுத்து அழியவே அழியாது. பசுமையாகவே இருக்கும். என் தத்துவ போக்கை தளர்த்திவிட்டு  இன்னுமொரு முறை சிலேட்டின் அந்தப்பகுதிகளைத் தொட்டுப் பார்த்தேன் 

        ஆனால் அந்தப்பகுதி சற்று வழவழப்பாக இருந்தது. சிலேட்டுகள் பொதுவாக தேர்ந்த தோசைக்கல்லைப் போல கொஞ்சம் சொரசொரப்பாக இருந்தால்தான் நன்றாக எழுதவரும் என ஒரு நம்பிக்கை உண்டு. வழவழப்பாக இருந்ததால் பல்பத்தை அழுத்தம் கொடுக்க முடியாது. அதனால் எழுத்து எழுத வராமல் வழுக்கிப்போகும். எஙகள் வகுப்பிலுள்ள கரும்பலகைக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை கரி பூசும் வைபவம் நடக்கும். அதாவது அடுப்புக்கரி, ஆமணக்கு விதை, வேலியில் இருக்கும் ஒரு வகையான தழைவகை அனைத்தும் ஒன்றாக தண்ணீர் சேர்த்து இடித்தக் கலவையை கரும்பலகையில் நன்றாகப் பூசிவிடுவோம். அடுத்த நாள் அதைத் துணியால் நன்கு துடைத்துவிட்டால் 'போர்டு' கருகருவென எழுதுவதற்கு அருமையாக இருக்கும். இந்த முறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானி யார் எனத் தெரியாது. ஆனால் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்த ஒரு பழக்கம். அப்படி இடித்த கரியின் மிச்சமீதியை என் சிலேட்டில் பூசி பதப்படுய்திய அனுபவமும் நிறைய உண்டு. என் கை சிலேட்டை விட்டு இன்னும் விலகவில்லை. என் கை இப்போது விரிசலைத் தொட்டது.

        இந்த சிலேட்டு என்னுடன் எவ்வளவு காலம் பயணப்பட்டிருக்கும். வெகு ஆச்சரியமாக இருந்தது. சிலேட்டு கொண்டு வரவில்லையெனில் எங்கள் வகுப்பாசிரியர் வெளியே நிற்க வைப்பார். அதனால் ஞாபகமாக அதைப் பையில் வைத்து எடுத்து போவோம். புத்தகங்களுக்கு இடையில் நடுப்பகுதியில்தான் வைப்பேன். அப்போதுதான் அது உடையாது. இல்லாவிட்டால் சைக்கிளில் பையை மாட்டும்போது உராய்ந்தோ அல்லது வகுப்பில் பையை வைக்கும் போதோ மோதியோ உடைந்துவிடும். வீட்டுப்பாடம் எழுதிய சமயங்களில் கையில்தான் தூக்கி செல்லவேண்டும். வேறுவழியில்லை. பையில் வைத்தால் அழிந்துவிடும். அப்படி ஒருமுறை கையிலேயே தூக்கிசெல்லும் போது தவறி விழுந்ததில் விழுந்த விரிசல்தான் அது.

        சமீபத்துல இந்த மாதிரி சிலேட்டுகளை என்னுடைய ஊரில் அண்ணாச்சி மளிகைக்கடைகளில் பார்த்ததாக ஒரு ஞாபகம். அரிசி மற்றும் தானிய மூட்டைகளுக்கு மேல் அன்றைய விலையை எழுதி தொங்கவிட்டுருப்பார்கள். அதேபோல ஒருமுறை கிராமப்பகுதியில் உள்ள ஒரு சின்ன கடையில் டிஃபன் சாப்பிடும்போது கல்லாவில் உட்கார்ந்து இருந்த கடைக்காரர் சிலேட்டு பென்சில் வைத்து கணக்கு சொன்னார். வேறு எங்கும் பார்த்த நினைவு இல்லை.

        என் மகள் எழுத ஆரம்பித்தப் புதிதில் ஒரு சிலேட்டை வாங்கி கொடுத்தேன். அது பிளாஸ்டிக் ஃப்ரேம் போட்ட பெயிண்ட அடிக்கப்பட்ட தகர சிலேட்டு வகை. தூக்கவே லேசாக இருக்கும். ஆனால் அதை அவள் ஒரு வாரம் கூடப் பயன்படுத்தியதாக எனக்கு நினைவில்லை. பள்ளியிலும் தேவைப்படவில்லை. அவள் பேப்பர் பென்சிலுக்குத் தாவிவிட்டாள். 

        நான் படிக்கும் காலங்களில் சிலேட்டால் மாணவர்களுக்கு பல உபரி பயன்பாடுகளும் உண்டு. சமயத்தில் சிலேட்டுதான் நமக்கு ஆயுதம். மற்றவரைத் தாக்கவும் உதவும். தாக்குதலில் இருந்து தப்பிக்க கேடயமாகவும் இருக்கும். சிறுமழைத் தூறலில் இருந்து காக்கக் குடையாகவும் பயன்பட்டதுண்டு.

       கிளீன் சிலேட்டு என இப்போதெல்லாம் நம் சொல்லில் மட்டும்தான் சிலேட்டு உள்ளது.  'ஸ்டைலஸ்', 'ஸ்கிரிபிள் பேடு" என எலக்ட்ரானிக் ஸ்லேட்டுகள் வந்துவிட்டது. பளிச்சென எழுதும். பளீரென அழியும். புத்தம் புதியதாக இருக்கும் ..... ஆனால் ஒன்று இந்த இயந்திர கால 'மாடர்ன் எலெக்ட்ரானிக் பேடுகள்' நாம் எழுதி அழித்த நினைவுகளை கல்லு சிலேட்டு போல வெளிறிய எண்ணங்களாக பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே ....

        பி.கு: என் கல்லூரி மூத்தவர் இளம்பரிதி தன் பழைய சிலேட்டை கண்ட சந்தோசத்தைப் பகிர்ந்து என்னை எழுதத் தூண்டியதில் நான் எழுதிய என் அனுபவம்தான் இது!

        சிலேட்டு பிடித்திருப்பின் தங்கள் அனுபவத்தை கமெண்டில் பகிருங்க

Thursday, April 17, 2025

கப்பக் கிழங்கு

 


        “வாடி என் கப்பக் கிழங்கே …” 

        அந்தப் பாட்டைத் தெரியாதவங்களே யாரும் இருக்க முடியாது. ‘கப்ப’ அப்படின்னா மலையாளத்துல கிழங்குன்னு பொருள். அப்ப ஏன் கப்பக் கிழங்குன்னு சொல்றாங்க? அந்த ஆராய்ச்சியை பிறகு வச்சுக்குலாம். நாம நம்ம கதைக்கு வருவோம். 

          நம்ம ஊரு மரவள்ளிக் கிழங்கைப் பற்றிய சுவாரசியமான கதைதான் அது. அதைக் குச்சிக் கிழங்குன்னும் நம்ம ஊருபக்கத்துல சொல்லுவாங்க. வருசத்துல ஒரு முறையோ இரண்டு முறையோ நம்மூரு விவசாயிங்க கண்டிப்பா இதை மானாவாரி பயிராக பயிருட்டுருவாங்க. 

          வானத்துக் கொடையான மாரியை நம்பி பயிருடுவதுதான் வானமாரி பயிர். அது இலக்கணப்போலியாக மானவாரின்னு மருவி பின்னாளில் மானாவாரி பயிராடுச்சு.

          குச்சிகிழங்கு பயிருடணும்னா தோராயமா ஒரு ரெண்டுஞாண் அளவுக்குள்ள குச்சியை நறுக்கி மண்ணுல நட்டு வச்சுருவாங்க. அவ்வளவுதான். குச்சி நறுக்கறதுக்குண்ணே தனியா குச்சிவெட்டி ஒண்ணு இருக்கும். ஒரே அளவா நறுக்குவாங்க. நிலத்தை ஒரு உழவு ஓட்டியபிறகு நட்டு வச்ச குச்சி அப்படியே மடமடன்னு இலை துளிர்த்து வளர்ந்துரும். ஆரம்பத்துல தண்ணியைப் பாத்து பாத்து விடணும். குச்சி மண்ணுல புடிச்சிக்கிச்சின்னா பிறகு அது தானா வளர்ந்துரும். ஆரம்ப காலத்துல ஆடு மாடு கடிச்சிராம கவனமாக பாத்துக்கணும். அதே மாதிரி பயிருக்குண்டான தண்ணியை அப்பப்ப பாத்து பாத்து விடணும். பஞ்சகாலத்துல மழையில்லாம ஏமாந்த காலங்களில் குடத்துல தண்ணி எடுத்துட்டு போயி டப்பாவுல தண்ணி மோர்ந்து ஊத்தி வளர்த்த கொடுமைகளும் உண்டு.  ஒருதடவையோ ரெண்டு முறையோ களைகளைப் பாத்து புடுங்கணும். அது நிலத்தைப் பொறுத்து இருக்கும்.

            செடி நல்லா புடிச்சு வளர்ந்தபிறகு பார்க்கறதுக்கு நல்லா அடர்த்தியாவும் உயரமாகவும் இருக்கும். அறுவடைக்குத் தயாரனவுடனே குச்சிப் புடுங்கற நிகழ்வு நடக்கும். அதாவது கிழங்கைப் புடுங்கி எடுக்கற அறுவடை காலத்துல ஆளை வச்சு செடியைப் புடுங்கி கிழங்கை மட்டும் பிரிச்சி எடுப்பார்கள். கிழங்கு பிரிச்சதுக்கப்புறம் மீதமான குச்சியை கொஞ்சம் மாட்டுத் தீவனத்துக்கும் மற்ற ஏதாவது எரிக்கறதுக்கும் பயனாயிரும். குச்சியை வச்சி சின்னப்பசங்க  விளையாடறதும் உண்டு. 

            கிழங்குத் தோலோட இருக்கும் போது ஒருவிதமான ஷைனிங்கா இருக்கும். மெழுகுப் பூசினாற்போல பளபளன்னு. ஆனா கையில ஒட்டாது. கிழங்குப் புடுங்கின உடனே உடைச்சு பச்சையா சாப்புட்டா அருமையா இருக்கும். சாப்பிடும்போதே நம்ம வாயிலே கிழங்குப் பால் தட்டுதெறிக்கும். அந்த சுவையே தனிதான். 

             பிறகு அந்த கிழங்குகளை மூட்டையாக்கி டிராக்டர்லயோ அல்லது மாட்டு வண்டியிலயோ எடுத்துட்டுப் போயி பக்கத்துலுள்ள சேகோ ஃபாக்டரியில விலைக்குப் போட்டுருவாங்க. அந்த வண்டிகளுக்கு ரெண்டு முறை எடை போடணும். காலி வண்டியோட முதல்ல ஒருமுறை அப்புறம் கிழங்கு ஏத்திகிட்டு ஒருமுறை. ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்தான் கிழங்கோட எடை. கொஞ்சம் கிழங்கை சில்லைறயில மார்க்கெட்டில் விற்பதும் உண்டு. 

           அதுக்குப் பிறகு அந்த கிழங்கு பல பாதைகளில் பயணிக்கும். சேகோ ஃபாக்டரிக்கு போன கிழங்கை உரிக்கறதுக்குண்ணே ஒரு பெரிய ஆள்படை இருக்கும். அவங்க அந்த தோலை உரிக்கும் அழகே அழகு. பேசிகிட்டே கடகடன்னு உரிப்பாங்க. தோலை சீவணும். பச்சைக்கிழங்கு கையிலே வழுக்கும். ஆனா கவனமா அதை பிடிச்சிகிட்டு சீவி எடுக்கணும். கூலி பெரும்பாலும் எடையைப் பொறுத்துதான். எத்தனை கிலோ உரிக்கறாங்களோ அதுக்கேத்த மாதிரி காசு. கிழங்கு சீசன்ல பள்ளிகூடத்துக்கு லீவு போட்டுட்டு கிழங்கு உரிக்கற வேலைக்கு போறதும் உண்டு. 

            பயணம் தொடரும் ….

Monday, March 24, 2025

ஒற்றை ரோஜா (சிறுகதை)

      


  “டேய் சேகரு, இது மாதிரி இன்னியொரு சான்ஸு ஒனக்கு கெடைக்கவே கெடைக்காது. உம் மனசுல உள்ளத, இதயம் முரளி மாதிரி கடேசி வரைக்கும் சொல்லாம மூடி மறைச்சுட்டு இருக்காத! இப்பயாவது அவ காதுல சொல்லிபுடுரா! இதை வுட்டா பொறவு ஒனக்கு வேற நல்ல சான்ஸே கெடைக்காது!”, என பாலு சேகரின் காதில் கடிக்காதக் குறையாக கிசுகிசுக்க, சேகரும் பதிலுக்கு, "“சரிடா பாலு, இன்னைக்கு கண்டிப்பா அவகிட்ட சொல்றேண்டா!”, என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பள்ளி ஒலிபெருக்கியில், "சேகர், மேடை அருகே வரவும்", என ஓங்கி ஒலித்தது. பாலு அவனை கண்களாலேயே வாழ்த்தி முதுகில் தட்டிக்கொடுத்து வழியனுப்பிவைக்க சேகர் மெதுவாக பள்ளியின் ஆண்டு விழா மேடையை நோக்கி நகர்ந்தான்.


        அவனுக்கு முன்பாகவே அவளது பெயர் அழைக்கப்பட்டு ஏற்கனவே அவள் விழா மேடையில்  நின்றிருந்தாள். இப்படி இருவரும் ஒரே மேடையில், ஒரே நாளில், ஒருசேர நிற்கப் போகிறோம் என நினைக்கையில் அவன் உடம்பு ஒரு கணம் புல்லரித்ததுப் போனது. இப்படி அவளுடன் அவன் ஒன்றாக இருப்பது போல கனவுகள்தான் வரும். ஆனால் இன்று, தற்போது, தான் கண்ட கனவுகள் நனவாக இருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை.


        அதுபோல இனிய கனவுகள் அவனுக்கு அடிக்கடி வரும். அந்தக் கனவுகளைப் பற்றி நினைத்தாலே அவன் உடனே மெலிதாகி வானத்தில் மேகமாய் பறக்க ஆரம்பித்து விடுவான். அந்தக் கனவுகளில் மணமேடை போன்ற ஒரு சூழல் வரும். சுற்றிலும் வெண்பஞ்சு மேகங்கள் பரந்திருக்கும். பச்சைப் புல்வெளிகளும், பூந்தோட்டங்களும் நிறைந்து அந்த இடமே பசுமையாக, சுவர்கமாக காட்சியளிக்கும். பூமாலைகள் தாங்கிய வெள்ளை உடை தேவதைகள் தன்னை சுற்றிசுற்றி வருவார்கள். அவளுடைய மூச்சுக் காற்று தன் மேலே படும்படியான ஒரு  நெருக்கத்தில் அவன் அவளுடைய கண்களையே நோக்கிக் கொண்டு அகில உலகையே வென்ற ஒரு பூரிப்புடன் நின்று கொண்டிருப்பான். கிட்டதட்ட பாரதிராஜா படங்களில் வருவது போலவே அந்தக் கனவுகள் இருக்கும். அடிக்கடி கனவில் வந்து அவனை ஆட்கொள்ளும் அளவுக்கு அவன் மனதை அவள் முழதாக ஆக்கிரமித்திருந்தாள்.


        ஒரு கணம் இப்பவும் அந்த கனவு மின்னலாய் அவன் மனதில் வந்து போனது. அந்தப் பூரிப்பிலேயே அவன் மேடையை நோக்கி மிதந்து கொண்டேபோனான்.


        சேகர் அவளை மனதாரக் கொண்டாடி, ரசித்து, காதலிக்கத் தொடங்கி இன்றோடு ஐந்து வருடங்களாயிருந்தது. இயற்கை அவர்கள் இருவரையும் எட்டாம் வகுப்பிலிருந்தே ஒரே வகுப்பறையில் ஜோடியாக அமர்த்தி அழகு பார்த்தது. அவளை என்று முதன்முதலாகப் பார்த்தானோ அன்று விழுந்தவந்தான் இன்று வரை எழவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையில் அப்படி ஒரு பொருத்தம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும் அப்படிதான் தோன்றும். படிப்பில் இருவரும் படுகெட்டி. போட்டி போட்டுக்கொண்டு முதல் இரண்டு இடத்தையும் மாறிமாறி பிடிப்பார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவர்கள் வாங்கிய மதிப்பெண்களைப் பார்த்து வகுப்பாசிரியர் கிண்டலாக, “என்ன ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து படிச்சீங்களா, சொல்லி வச்ச மாதிரி ஒரே மார்க்கு வாங்கிருக்கீங்க”, என ஏதேச்சையாக சொன்னதுதான் இவனுக்கு முதல் அட்சாரமே. அந்த அட்சாரத்தின் கிளைமாக்ஸ்தான் இன்றைய மேடை நிகழ்வு. பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் அவள் முதல் இடத்தையும் இவன் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தான். அவள் அங்கு ஏற்கனவே மேடைக்குச் சென்று முதல் இடத்தை ஆக்கிரமித்து நின்றது கண்டு அவனுக்குப் பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருந்தது. தூரத்தில் அவள் அணிந்திருந்த கண் கண்ணாடியில் காலை இளம் வெயில்பட்டு பிரதிபலித்தது அவனுக்கு அவள் ஏதோ ஞானஒளி சித்திரமாகத் தெரிந்தாள்.


        இவனும் ஒரு காலத்தில் தலைவலி பிரச்சினைக்காக கண்ணாடி அணிந்திருந்தான். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அதுவே சரியாகி இப்போதெல்லாம் கண்ணாடி அணிவதில்லை. அப்போது அவனைப் பார்த்து ஒருவர், “என்னடா சைட்டுக்காக கண்ணாடி போட்டிருக்கியா”, என யதார்த்தமாக ஐ-சைட்டைப் பற்றிக் கேட்க இவனுக்குள் ஏற்கனவே இருந்த ஃப்ளேம் இன்னும் பலமாகப் பற்றிக் கொண்டது. அது இப்போது திடீரென நினைவுக்குவர அதை நினைத்து மனதால் வெட்கித்துக் கொண்டே மேடையை நெருங்கினான்.


        வேகமாக மேடை மேலே ஏற இருந்தவனை, "இங்கே வாப்பா", என ஒரு ஆசிரியரின் குரல் தடுத்து அழைத்தது. "யாருடா இது, சிவ பூஜையில புகுந்த கரடி மாதிரி நடுவுல? நம்ம இன்னைக்கு அவளோடா கிட்டக்க போயி நிக்க முடியாதா? பேச முடியாதா?", என பலத்த சந்தேகப் பார்வைகளுடன்,  "சார், நாந்தான் சேகர்", என்று பவ்யமாக நின்றான். 


        "இந்தா இந்த பேட்ஜை கழுத்தில் போட்டுக்கோ, அதுல உம் பேரையும் நல்லாத் தெரியற மாதிரி பெருசா எழுது", என ஒரு பேனாவை அந்த ஆசிரியர் அவன் கையில் கொடுத்தார். "ஓ இதுக்குதான் நிக்க சொன்னாரா", என அப்போதுதான் அவனுக்கு உயிரே வந்தது. ஆனால் அவர் கொடுத்த பேனா எழுதாமல் மக்கர் செய்யவே அவன், "வேறு பேனா இருக்குமா", எனக் கேட்டான். அவரும் தன்னிடம் இருந்த இன்னொரு பேனாவைக் கொடுக்க, உடனே அவனுக்கு ஒரு நமட்டு சிரிப்பு வந்தது. "என்னடா இளிப்பு வேண்டி கெடக்கு, சீக்கிரமா பேரை எழுதிட்டு, மேலே போ, எல்லாரும் வெயிட் பண்றாங்க", என அவர் ஒரு அதட்டு அதட்ட அவனும் அவன் பெயரை மெதுவாக எழுத ஆரம்பித்தான்.


        ஒருமுறை இப்படிதான் இவனுடைய பேனா எழுதாமல் போனது. அப்போது அவன் வகுப்பில் இருந்த மற்ற சக மாணவர்களிடம், "எக்ஸ்ட்ரா பேனா ஏதாச்சும் இருக்கா", எனப் பொதுவாகக் கேட்க உடனே அவள் எல்லோரையும் முந்திக்கொண்டு வந்து ஒரு பேனாவைக் கொடுத்தாள். இவனும் வாஞ்சையோடு மூடியைக் கழற்றிவிட்டு எழுதப் போகும் போதுதான் கவனித்தான். அந்த பேனாவில் "நிப்" இல்லாமல் வெறும் நாக்கை மட்டும் காட்டிக் கொண்டிருந்தது. இப்படி அவனை முட்டாள் ஆக்கி விட்டாளே என அவன் கோபமாக தலையை நிமிர்த்த அவளும் அவன் ஏமாந்ததை பார்த்து சிரித்துக் கொண்டே போய்விட்டாள். அவளுடைய அந்த சிரிப்பு அவன் கோப அலையை அமர்த்தி அவனும் அவளுடன் சேர்ந்து சிரித்துவிட்டான்.


        ஒருவழியாக பெயர் எழுதிய பேட்ஜைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு மேடையேறி அவள் அருகிலேயே வந்து நின்றுவிட்டான். கை கால் எல்லாம் படபடவென தந்தியடித்தது. அவள் அவனைப் பார்ப்பது நன்கு தெரிந்தும் ஏனோ இவன் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். தலைமையாசிரியர், "விழா ஆரம்பமாகலாம்", எனச் சொல்ல கடவுள் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அனைவரும் வாய்விட்டு கூடவே பாட ஆரம்பித்தார்கள். படபடப்பில் இருந்த இவனுக்கு பாட்டு வரிகள் மறந்து பாடவே வரவில்லை. அவள் அவனைப் பார்த்து பாட்டை எடுத்துக் கொடுக்க இவனும் அவளைத் தொடர்ந்து பாட ஆரம்பித்தான்.


        இது ஒன்றும் இவனுக்கு புதியதில்லை. பலமுறை அவள் அவனுக்கு இதுபோல பிண்ணனி உதவி செய்திருக்கிறாள். இருவரும் நல்ல உயரமானதால் கடைசி பெஞ்சுக்கும் முந்தைய பெஞ்சில்தான் அமர்வார்கள். இருவரின் இருக்கையும் கிட்டதட்ட ஒரே வரிசையில் இருக்கும். ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டு இவனுக்கு ஸ்டார்டிங் டிரபிள் இருந்தால் அவள் குசுகுசுவென தலையைக் குனிந்து கொண்டே பதிலை எடுத்துக் கொடுப்பது ஒன்றும் அவனுக்கு புதிதில்லை. இன்றும் அதேதான் நடந்தது. அவள் பாட இவனும் அவளைப் பின் தொடர்ந்து பாடினான். 


        கடவுள் வாழ்த்து முடிந்து தலைமையாசிரியர் இவர்கள் இருவரின் திறமையையும் மதிப்பெண்களையும் பாராட்டிப் பேசி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். மாணவர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்து ஒலித்தது. மேடையருகே வீற்றியிருந்த பூவரச மரம் கரகோஷக் காற்றில் அசைந்து பூவை அவர்கள் மேலே அட்சதையாக அள்ளித் தெளித்தது. அவனைச் சுற்றியிருந்த வெள்ளை வேட்டி கட்டிய ஆசிரியர்கள் தேவதைகளாக அவன் கண்ணில் பட்டனர். விழா முடிந்தவுடன் அவளிடன் கண்டிப்பாக சொல்லிவிட வேண்டும் என அவன் மனதில் உறுதியை வரவழைத்துக் கொண்டே அவளுடன் மேடையில் இருந்து இறங்கினான். 


        கூடவே படித்திருந்தாலும், பார்த்திருந்தாலும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதில்லை. அவன் அவளை வகுப்பில் மறைந்திருந்து பார்ப்பதும், அவள் வீட்டின் தெருவில் அடிக்கடி சைக்கிளில் உலா வருவதும், பள்ளி முடிந்து போகும் போது பின் தொடர்வதும் அவளும் நன்கே அறிவாள். ஆனால் இதுவரை பேச்சு இல்லை. விழா முடிந்து அவரவர் செல்ல இவர்கள் இருவர் மட்டும் நடந்து கொண்டிருந்தனர்.  


        இதுதான் சரியான சமயமென, "ஒரு நிமிஷம் ஒங்கிட்ட பேசணும்", என சொன்னான்.


        "அப்பாடா இப்பவாவது பேசுனயே, சொல்லு", என அவளும் திரும்பி சிரித்தவாறு இவன் என்ன சொல்லப்போகிறான் என்ற ஆர்வத்தோடு நின்றாள். 


        "இல்லை, சும்மாதான், கங்ராஜுலேசன்ஸ்".


         "ம் ... தாங்க்ஸ், அவ்வளவுதானா", என்றாள். 


        "பெஸ்ட் ஆஃப் லக்".


        "தாங்க்ஸ், ஒனக்கும் என்னோட பெஸ்ட் ஆஃப் லக்" என அவள் சொன்ன பிறகு இருவரும் பிரிந்து தத்தம் நண்பர்கள் நின்ற பகுதிக்கு சென்றனர்.


        "என்னடா மேட்டர சொல்லிட்ட போல! சூப்பர்! என்ன சொன்னா? எல்லாம் சக்ஸஸ்தானே", என பாலு அவன் வந்ததும் வராதுமாக குதித்தான்.


        "இல்லைடா பாலு, பேசுனேன் ஆனா அதை மட்டும் சொல்லலை. வேண்டாம்டா. எனக்கு பயமா இருக்கு. ஒரு வேளை அவளுக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டாக்கா என்னால அதை தாங்க முடியாது. ஒருவேளை அவ என் விருப்பத்துக்கு ஒத்துகிட்டாலும் எங்க குடும்பங்கள் வேணாமுனு சொல்லிட்டாலும் என்னால அதை தாங்கிக்க முடியாது. எனக்கு இப்படி இருக்கறதே ரொம்ப சந்தோசமாதான் இருக்கு. நான் எனக்குள்ள பொத்தி பொத்தி  வளர்த்த ஒத்தை ரோஜா என் மனசுக்குள்ளே இப்பவும் செழிப்பாதான் இருக்கு. அது எப்பவும் அப்படியேதான் இருக்கும். அதைப் பறிச்சு வாடிப் போறதை பார்க்குற தெம்பு எனக்கு இல்லைடா. என் கனவு என்னோடதான் இருக்கும். அது எங்கேயும் போகாது. நான் ரொம்பவே சந்தோசமாதான் இருக்கேன். ஆனா ஒண்ணு சொல்றேண்டா, எனக்கு நல்லா தெரியும். அவளுக்குள்ளேயும் ஒரு ஒத்த ரோஜா இருக்குன்னு எனக்குத் தெரியும். அதுவும் வாடாமல் இருக்கும். அதுவும் அப்படியே செழிப்பாதான் இருக்கும். அது எனக்கு நல்லாத் தெரியும்", என்று சொல்லிவிட்டு சைக்கிளைத் தள்ளிக் கொண்டே செல்லும் அவனை தூரத்தில் இருந்து இரண்டு கண்கள் மட்டும் பார்க்கத் தவறவில்லை---  அதை அவனும் அறியாமலில்லை ... சிரித்துக் கொண்டே நடந்தான்.


(1960களில் குமுதம் இதழில் பதிப்பிற்காக அனுப்பப்பட்ட 'ஒற்றை ரோஜா' என்ற கதையைத் தழுவி எழுதப்பட்டது)  

Friday, March 21, 2025

Ding

 

       Nobody wants to get dinged, but there are some people who seem to wait for it, though not physically. Rideshare drivers are among them—they love it when their app dings to notify them of a ride.


        One evening, he received such a "loving" ding. He wouldn’t know the destination until he picked up the rider, but he knew exactly where the pickup was. He wasn't a full-time professional driver; he did it as a part-time job. He always felt butterflies swirling in his stomach whenever he got such a ding because he didn’t know who the rider was or where the ride would go. It was always thrilling and suspenseful until he picked up the person and learned the destination. When he saw that the pickup was at a hotel, he felt a little more relaxed. It seemed like it would be a decent ride. He kept his hopes high and drove to the pickup spot as the app directed. 


         It was a big, upscale hotel in town, and he slowly pulled inside, heading toward the lobby porch. Typically, these types of rides were really good because they either went to the airport or involved long trips. Plus, they usually came with a lot of luggage. He knew he’d need to help load the luggage, but the good thing was that he often received tips for doing extra work. 


          As he pulled into the hotel’s front pickup area, he spotted two young people waving their hands. They seemed to recognize the ride. However, they weren’t carrying any large luggage—just small carry-ons. He figured the ride would still be to the airport, since carry-ons were typically the type of luggage one would bring to an airport. Airport rides were always a good bet because the airports were located outside the city, guaranteeing a long ride and the potential for a decent tip.


          The young people climbed into the car, and he accepted the ride in the app. As he had hoped, the destination showed "airport." He was very happy. He took the highway toward the airport, and the two passengers in the back kept talking. They spoke loudly and excitedly, making it impossible for him to ignore their conversation. It sounded like they were coming back from a technology conference. Their discussion was filled with hi-tech topics, and he noticed they were from two different reputed academic research institutions. Their talks were so interesting and enthralling. 


         It had already been twenty minutes since he picked them up, and he still had about half the distance to go before reaching the destination, so he continued listening to their conversation.


      One of them suddenly turned to him and asked, “Hello, where are we going?”


        “To the airport. We’ll be there in about 20 minutes,” he replied.


       “Which airport?” the other guy asked.


        “International. That’s what the app shows as the destination,” he answered politely.


         The second guy then added, “He’s right. International is where I wanted to go. Any problem?”


        The first guy, now sounding concerned, said, “I thought we were going to the domestic airport.” 


        After that, the two of them started nearly arguing about the airport mix-up. It became clear they didn’t know each other at all. They had just met outside the conference and had been chatting together in the hotel lobby about the event. When one of them mentioned heading to the airport, the other assumed they were both going to the same airport. They had never asked which airport; they were too wrapped up in their conversation. The two airports were 30 minutes apart and located at different ends of town.


       The driver realized there was nothing more he could do, so he decided to drop one passenger off at the international airport and the other at the domestic airport. After the mix-up and drop-off logistics were sorted out, the car fell silent. The rest of the ride was quiet, with no one speaking, and no more enlightening moments. He said to himself, “What a smart ding.”